வாகன ஓட்டிகள் அவதி


வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 5 May 2021 1:16 PM GMT (Updated: 5 May 2021 1:16 PM GMT)

வாகன ஓட்டிகள் அவதி

மடத்துக்குளம்
மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் மைவாடி சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. குறிப்பாக கணியூர், துங்காவி, மடத்துக்குளம் ஆகிய சாலைகளின் வழியே வரும் வாகனங்கள் மைவாடி ஊராட்சி செங்கன்டி புதூர் பிரிவவில் இருந்து வளைவில் திரும்பி மைவாடி வழியாக மடத்துக்குளம், உடுமலை ஆகிய இடங்களுக்கு  செல்கின்றன.
அவ்வாறு செல்லும் கனரக வாகனங்கள் வேகமாக செல்லும்போது  புழுதி வாரி இறைத்தவாறு செல்கிறது. இதனால் இந்த சாலையின் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு சுவாச கோளறுகளை உருவாக்குகிறது. எனவே  சாலையில்  படிந்துள்ள உள்ள மணலை, அப்புறப்படுத்த பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story