கொரோனா சிறப்பு முகாம் அமைக்க கோரிக்கை


கொரோனா சிறப்பு முகாம் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 5 May 2021 5:15 PM GMT (Updated: 5 May 2021 5:15 PM GMT)

கொரோனா சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சிவகாசி, 
விருதுநகர் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனியல், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ் குமாரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் அதிகஅளவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் பாதிப்பு அடைந்தவர்கள் போதிய படுக்கை வசதி இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரி, சிவகாசி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி களில் கொரோனா சிகிச்சைக்கு சிறப்பு முகாம் அமைக்க வேண்டும். கடந்த வருடம் இங்கு சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு பலர் சிறப்பான சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அதே போல் ஒரு நிலை ஏற்பட சிவகாசி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு தொடங்கும் பணியை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story