தொழிலாளி சாவு


தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 5 May 2021 6:30 PM GMT (Updated: 5 May 2021 6:30 PM GMT)

தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

கரூர் 
கரூர் வேடிச்சிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (46). கூலிதொழிலாளியான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுப்பிரமணியன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story