பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற வன்முறைகளை கண்டித்து பா.ஜனதா சார்பில் சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை,
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற வன்முறைகளை கண்டித்து பா.ஜனதா சார்பில் சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நாகேஸ்வரன், மாவட்ட நிர்வாகிகள் ராமபிரபு, சண்முகம், ஆறுமுகம், ஒன்றிய தலைவர்கள் புவியரசு, மழுவேந்தி மற்றும் உதயா, ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ. பங்கேற்பு
ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்ற பின்னர் அங்கு நின்ற சிலர் மம்தா பானர்ஜியின் உருவப்படத்தை எரிக்க முயன்றனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
காரைக்குடி
மாவட்ட செயலாளர் நாகராஜன்,மாவட்ட துணைத்தலைவர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நகர நிர்வாகிகள் குமாரவேல், கார்த்தி, மாரியப்பன், மணிகண்டன், அருண்குமார், விசுவநாதன், ஆனந்த், விக்னேஷ், லட்சுமணன், பிரபாகரன். பரமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story