பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 May 2021 8:10 PM GMT (Updated: 5 May 2021 8:10 PM GMT)

மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பெரம்பலூர்
மேற்கு வங்காளத்தில் தேர்தல் முன்விரோதத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதல்களை கண்டித்தும், வன்முறைகளுக்கு பொறுப்பு ஏற்று அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலக கோரியும்  பெரம்பலூர் தெற்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் புதிய பஸ்  நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை கட்சியின் பெரம்பலூர் தெற்கு மண்டல் தலைவர் ஜே.வெங்கடேசன், மாவட்ட தலைவர் சந்திரசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட துணைத்தலைவர் அசூர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வன், செயற்குழு உறுப்பினர் சாமி.இளங்கோவன், சட்டமன்ற பொறுப்பாளர் கவுல்பாளையம் கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பிரசார பிரிவு ராமசாமி நன்றி கூறினார்.


Next Story