தலமலை வனச்சாலையில் பஸ்சை வழிமறித்த யானைக்கூட்டம்


தலமலை வனச்சாலையில் பஸ்சை வழிமறித்த யானைக்கூட்டம்
x
தினத்தந்தி 5 May 2021 9:34 PM GMT (Updated: 5 May 2021 9:34 PM GMT)

தலமலை வனச்சாலையில் பஸ்சை யானைகள் வழிமறித்தன.

தாளவாடி
தலமலை வனச்சாலையில் பஸ்சை யானைகள் வழிமறித்தன. 
3 யானைகள்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தலமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதி வழியாக தலமலையில் இருந்து திம்பம் செல்லும் சாலை அமைந்துள்ளது. வனவிலங்குகள் இந்த சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. ராமர் அணை அருகே செல்லும் போது வனச்சாலையில் 3 யானைகள் நின்றுகொண்டு இருந்தன.
வேண்டுகோள்
இதனால் பஸ்சை டிரைவர் சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டார். சுமார் 30 நிமிடம் யானைகள் சாலையிலேயே அங்கும், இங்கும் சுற்றித்திரிந்தன. இதை பஸ்சுக்குள் இருந்த பயணிகள் தங்களுடைய செல்போனில் படம் பிடித்தார்கள். பின்னர் தானாக யானைகள் காட்டுக்குள் சென்றுவிட்டன. அதன்பின்னரே பஸ் புறப்பட்டு சென்றது.  தலமலை வனச்சாலையில் அடிக்கடி யானைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்கவேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். 

Next Story