கணவர் கண் எதிரே பரிதாபம் பால் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி


கணவர் கண் எதிரே பரிதாபம் பால் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
x

சென்னை கொரட்டூரை அடுத்த பட்டரவாக்கம், லாரி ஒன்று திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

திரு.வி.க.நகர், 

சென்னை கொரட்டூரை அடுத்த பட்டரவாக்கம் ஆவின் சாலையில் இருசக்கர வாகனத்தில் மனோகரன் (வயது 48) என்பவர் தன்னுடைய மனைவி ஜான்சி ராணியுடன் (42) கொரட்டுரில் இருந்து அம்பத்தூர் நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த ஆவின் பால் பண்ணை ஒப்பந்த லாரி ஒன்று திடீரென இவர்கள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த ஜான்சிராணி மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலையில் பலத்தகாயங்களுடன் உயிருக்கு போராடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் சுமார் ஒரு மணிநேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் கணவர் கண் எதிரேயே ஜான்சி ராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் மனோகரன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது தொடர்பாக லாரி டிரைவர் தினேஷ் என்பவரை பிடித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story