விவசாயி தற்கொலை


விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 6 May 2021 2:25 PM GMT (Updated: 6 May 2021 2:25 PM GMT)

குடும்ப தகராறில் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

திருமங்கலம்,மே.
சிந்துபட்டி அருகே உள்ள ஒத்தபாரப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கம் (வயது 52). விவசாயி. குடும்ப பிரச்சினை காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை குடித்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story