மடிக்கணினி திருடியவர் கைது
மடிக்கணினி திருடியவர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை
குளித்தலை காவல்காரர் தெருவை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 18). இவர் தனியார் தொழில் கல்வி கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்ற அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20) என்பவர் வீட்டினுள் இருந்த தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட மடிக்கணினியை திருடி கொண்டு வெளியே சென்றுள்ளார். இதைக்கண்ட சதாசிவம், அங்கிருந்தவர்கள் உதவியுடன் மணிகண்டனை பிடித்து குளித்தலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story