நகை கடையில் மோதிரம் திருடியவர் கைது


நகை கடையில் மோதிரம் திருடியவர் கைது
x
தினத்தந்தி 6 May 2021 7:09 PM GMT (Updated: 6 May 2021 7:09 PM GMT)

விருதுநகரில் நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் காசுக்கடைத்தெருவில் நகை கடை வைத்திருப்பவர் செந்தில்குமார் (வயது 41). இவரது கடைக்கு அவருக்கு அறிமுகமான முத்துராமன்பட்டியை சேர்ந்த சங்கரேஸ்வரன் (29) என்பவர் மோதிரம் வாங்குவதற்காக வந்தார். மோதிரம் இருந்த நகை பெட்டியை செந்தில்குமார் காட்டிய போது சங்கரேஸ்வரன் அதிலிருந்த மோதிரங்கள் திருப்திஇல்லை என கூறியவுடன் செந்தில்குமார் பக்கத்து கடையில் இருந்து வேறு மோதிரங்களை வாங்குவதற்காக சென்றார். அவர் மோதிரங்களை வாங்கிக்கொண்டு கடைக்குள் நுழைந்தபோது சங்கரேஸ்வரன் கடையில் உள்ள நகைப் பெட்டியிலிருந்த ஒரு பவுன் மோதிரத்தை எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று விட்டார். சங்கரேஸ்வரனை ஏற்கனவே செந்தில்குமாருக்கு அறிமுகம் இருந்ததால் அவரை கடையில் வைத்து விட்டு பக்கத்து கடைக்கு மோதிரம் வாங்க செந்தில்குமார் சென்று உள்ளார்.  இந்நிலையில் செந்தில்குமார் முத்துராமன்பட்டிக்கு சென்று சங்கரேஸ்வரனை பற்றி விசாரித்தபோது அவர் பல வருடங்களுக்கு முன்பே மதுரைக்கு குடிபெயர்ந்து விட்டதாக தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து செந்தில் குமார் இந்நகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரையில் பரவை பகுதியில் இருந்த சங்கரேஸ்வரனை கைது செய்து அவரிடம் இருந்த மோதிரத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story