சிங்கம்புணரி,
சிங்கம்புணரி போலீசார் சுக்காம்பட்டி சாலையில் வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை சந்தேகத்தின் பேரில் தடுத்து சோதனை செய்த போது மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் வந்த மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, மணல்மேல்பட்டியை சேர்ந்த குமார் மகன் வீரபிரபு(வயது20), அதே பகுதியை சேர்ந்த சேக்கு மகன் சக்திவேல்(40) ஆகிய 2 டிரைவர்களும் கைது செய்யப்பட்டனர்.