கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது


கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 May 2021 7:27 PM GMT (Updated: 6 May 2021 7:27 PM GMT)

அருப்புக்கோட்டையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கட்டங்குடி, சின்ன கட்டங்குடி பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைெபறுவதாக தாலுகா போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோதிமுத்து, பேச்சிமுத்து பாண்டியன் ஆகிேயார் தலைமையில் போலீசார் கொண்ட குழு அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி மேற்ெகாண்டனர். இந்நிலையில் நேற்று காலை கட்டங்குடி அம்மா நகரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சின்ன கட்டங்குடியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 49) என்பதும்,  கஞ்சாவை இருசக்கர வாகனத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும் இவருக்கு உடந்தையாக பெரிய கட்டங்குடியைச் சேர்ந்த பெண் வீரம்மாள் (50)  செயல்பட்டதும் தெரியவந்தது இவர்களிடம் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Next Story