பெயிண்டர் திடீர் சாவு


பெயிண்டர் திடீர் சாவு
x

நெல்லையில் பெயிண்டர் திடீரென்று இறந்தார்.

நெல்லை:

நெல்லை வி.எம்.சத்திரம் கவிதா நகரைச் சேர்ந்தவர் மாலையப்பன் (வயது 48). பெயிண்டரான இவருக்கு நேற்று திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மாலையப்பன் இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story