தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு


தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 6 May 2021 7:34 PM GMT (Updated: 6 May 2021 7:34 PM GMT)

முக்கூடலில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

முக்கூடல்:

முக்கூடல் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகன் மகேஷ் (வயது 23). கூலி தொழிலாளியான இவர் நேற்று மதுபோதையில் 17 வயதான வாலிபரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அரிவாளால் மகேசை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மகேசை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story