லாரி மோதி மூதாட்டி பலி
லாரி மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடத்தி (வயது 62). இவர் அப்பகுதியில் வீட்டுவேலை செய்து வந்தார். இவர் நேற்று காலையில் அங்குள்ள முத்தாரம்மன் கோவில் அருகே வீட்டுவேலை செய்வதற்காக, ரெயில்வே பீடர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சிமெண்டு லோடு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மாடத்தி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று, மாடத்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story