புதுக்கோட்டை மாவட்டத்தில் பகல் 12 மணிக்கு கடைகள் அடைப்பு
புதிய கட்டுப்பாடுகள் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பகல் 12 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.
புதுக்கோட்டை
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டது. இருந்தாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் தினமும் மதியம் 12 மணிக்கு மேல் மருந்து கடைகள், பால் விற்பனையகம், மருத்துவமனைகள் தவிர்த்து அனைத்து கடைகளையும் அடைக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும். பயணிகள் ரயில், பஸ்களில் மற்றும் வாடகை டாக்சிகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
இதனையொட்டி நேற்று காலை முதல் மதியம் 12 மணி வரை டீக்கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் வழக்கம் போல திறக்கப்பட்டன. அதன்பின்னர் மதியம் 12 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் மதியத்திற்கு பிறகு வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மிகக்குறைந்த அளவில் மட்டுமே வாகனங்கள் சென்றதை காண முடிந்தது. ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. ஓட்டல், பேக்கரிகளில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டன. மதியத்திற்கு பிறகு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டது. இருந்தாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் தினமும் மதியம் 12 மணிக்கு மேல் மருந்து கடைகள், பால் விற்பனையகம், மருத்துவமனைகள் தவிர்த்து அனைத்து கடைகளையும் அடைக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும். பயணிகள் ரயில், பஸ்களில் மற்றும் வாடகை டாக்சிகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
இதனையொட்டி நேற்று காலை முதல் மதியம் 12 மணி வரை டீக்கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் வழக்கம் போல திறக்கப்பட்டன. அதன்பின்னர் மதியம் 12 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் மதியத்திற்கு பிறகு வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மிகக்குறைந்த அளவில் மட்டுமே வாகனங்கள் சென்றதை காண முடிந்தது. ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. ஓட்டல், பேக்கரிகளில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டன. மதியத்திற்கு பிறகு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story