விஷம் தின்று தொழிலாளி தற்கொலை
விஷம் தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன்(வயது 58). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றும் பலன் இல்லாததால் மனமுடைந்த நிலையில், கடந்த மாதம் வீட்டில் இருந்த எலி மருந்தை(விஷம்) தின்றார். இதையடுத்து வீட்டில் வாந்தி எடுத்து மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரங்கநாதனின் மகன் ராஜ், தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story