மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்
கீரனூர்
கீரனூர் வாரி வடக்குத் தெருவை சேர்ந்தவர் முகமது ஷரிப். இவரது மகன் ஷாஜகான்(வயது 32). இவர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் கீரனூரிலிருந்து குளத்தூர் புறவழிச் சாலையை கடக்க முயன்றபோது திருச்சியிலிருந்து அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஷாஜகான் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷாஜகான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து கார் டிரைவர் பிரவீன்(33) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர் வாரி வடக்குத் தெருவை சேர்ந்தவர் முகமது ஷரிப். இவரது மகன் ஷாஜகான்(வயது 32). இவர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் கீரனூரிலிருந்து குளத்தூர் புறவழிச் சாலையை கடக்க முயன்றபோது திருச்சியிலிருந்து அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஷாஜகான் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷாஜகான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து கார் டிரைவர் பிரவீன்(33) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story