நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை


நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை
x
தினத்தந்தி 7 May 2021 6:48 PM GMT (Updated: 7 May 2021 6:48 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.

பலத்த மழை

தமிழகத்தில் கோடையில் அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரித்து வருகிறது. எனினும் அவ்வப்போது பரவலாக மழையும் பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும், மாலை நேரங்களில் மேகங்கள் திரண்டு மிதமான மழை பெய்கிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போன்று தேங்கியது.

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பாளையங்கோட்டை, அம்பை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் பலத்த மழை கொட்டியது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம்-1, சேர்வலாறு-2, மணிமுத்தாறு-4, நம்பியாறு-4, அம்பை-25, சேரன்மாதேவி-5, நாங்குநேரி-4, களக்காடு-2, பாளையங்கோட்டை-5, நெல்லை-15.

Next Story