சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 7 May 2021 7:20 PM GMT (Updated: 7 May 2021 7:20 PM GMT)

சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

லாலாபேட்டை
லாலாபேட்டை ரெயில் நிலைய வளாகத்தில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு குறித்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட கள்ளப்பள்ளி ஊராட்சியில் உள்ள 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ரத்தம், சார்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சத்து மாத்திரைகள், கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. அனைவரும் முககவசம் அணிய வேண்டும், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சிவக்குமார், டாக்டர் கோபாலகிருஷ்ணன், கள்ளப்பள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story