ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு முக கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள், பொதுமக்களுக்கு அபராதம்


ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு முக கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள், பொதுமக்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 7 May 2021 11:48 PM GMT (Updated: 7 May 2021 11:48 PM GMT)

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு முக கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

ஈரோடு
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு முக கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
நேதாஜி காய்கறி மார்க்கெட்
ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழக்கடைகள் இயங்கி வருகின்றன. இரவு நேரங்களில் மொத்த வியாபாரமும், காலை நேரங்களில் சில்லறை வியாபாரம் நடைபெறுகிறது.
தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்ற படுகிறதா? என்று மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அபராதம்
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் வீரப்பன்சத்திரம் போலீசார், மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து முக கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மார்க்கெட்டின் நுழைவு பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பொதுமக்கள், வியாபாரிகளின் உடல் வெப்பநிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் காய்கறி மார்க்கெட் வெளிப்பகுதியில் கடை அமைத்து வியாபாரம் செய்த 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் நேற்றும் மார்க்கெட் வெளியே கடை அமைத்து வியாபாரம் செய்த சில வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
-----

Next Story