மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது


மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2021 5:07 PM GMT (Updated: 8 May 2021 5:07 PM GMT)

கயத்தரறில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கயத்தாறு, மே:
கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக  வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நாகலாபுரத்தை சேர்ந்த செந்தில் முருகன் (வயது 40), நாகராஜன் (29), ெதற்கு இலந்தைகுளத்தை சேர்ந்த சொர்ணராஜ் (32) ஆகியோர் என்பதும், டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்று அதனை  சட்டவிரோதமாக விற்பதற்காக கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 240 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story