தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி 305 பேருக்கு தொற்று


தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி 305 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 8 May 2021 5:33 PM GMT (Updated: 8 May 2021 5:33 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். 305 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். 305 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 
305பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்தனர்.  மாவட்டத்தில் இதுவரை 74 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 305 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
1,407ஆக அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,382 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 277 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,407 ஆக அதிகரித்துள்ளது.

Next Story