பெரம்பலூரில் மேலும் 133 பேருக்கு கொரோனா


பெரம்பலூரில் மேலும் 133 பேருக்கு கொரோனா
x

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 95 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 10 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 15 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 13 பேரும் என மொத்தம் 133 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 3,193 ஆக உயர்ந்துள்ளது. இதில் 30 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 2,711 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 452 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 836 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story