விவசாயி விஷம் குடித்து தற்கொலை


விவசாயி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 May 2021 7:53 PM GMT (Updated: 8 May 2021 7:53 PM GMT)

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

நெல்லை ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 55). விவசாயி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்தோணிராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story