திருச்செந்தூர் அருகே தொழிலாளி தற்கொலை


திருச்செந்தூர் அருகே தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 9 May 2021 3:58 PM GMT (Updated: 9 May 2021 3:58 PM GMT)

திருச்செந்தூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே ராணிமகாராஜபுரம் மேல தெருவைச் சேர்ந்தவர் இசக்கிராஜ் (வயது 33). இவருடைய மனைவி பாலசுகிதா (28). இவர்கள் 2 பேரும் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்தனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இசக்கிராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் பாலசுகிதா வேலைக்கு சென்று விட்டார். இசக்கிராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அவர் திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று, இறந்த இசக்கிராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story