டாஸ்மாக்கடையில் துளைபோட்டு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை


டாஸ்மாக்கடையில் துளைபோட்டு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை
x
தினத்தந்தி 9 May 2021 5:53 PM GMT (Updated: 9 May 2021 5:54 PM GMT)

கிருஷ்ணராயபுரம் அருகே டாஸ்மாக்கடையில் துளைபோட்டு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி சமத்துவபுரம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடைக்கு பணியாளர்கள் வந்தனர். அப்போது கடையின் சுவற்றில் துளைபோடப்பட்டு இருந்தது. இதுகுறித்து மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கடையில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு ரக மதுபானங்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, மதுபானங்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
 இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
---------

Next Story