வாகனம் மோதி முன்னாள் கவுன்சிலர் பலி


வாகனம் மோதி முன்னாள் கவுன்சிலர் பலி
x
தினத்தந்தி 9 May 2021 7:45 PM GMT (Updated: 9 May 2021 7:45 PM GMT)

வாகனம் மோதி முன்னாள் கவுன்சிலர் பரிதாபமாக இறந்தார்

வாடிப்பட்டி
சமயநல்லூர் அருகே ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 55) இவர் பரவை பேரூராட்சியின் 12-வது வார்டு முன்னாள் கவுன்சிலர். தற்போது அங்குள்ள தனியார் பஞ்சு மில்லில் பணி செய்து வந்தார். மேலும் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராகவும் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று சமயநல்லூர் நான்குவழி சாலை அருகில் அவர் நடைபயிற்சி சென்றார். அப்போது மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story