மது விற்ற 17 பேர் கைது


மது விற்ற 17 பேர் கைது
x
தினத்தந்தி 9 May 2021 9:02 PM GMT (Updated: 9 May 2021 9:02 PM GMT)

சிவகாசி, சாத்தூர் பகுதியில் மதுவிற்ற 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி, சாத்தூர் பகுதியில் மதுவிற்ற 17 பேரை போலீசார் கைது செய்தனர். 
மதுபாட்டில்கள் 
சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களை கைது செய்தனர்.
 இதில் திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சத்யாநகரில் மது விற்ற ஆரோக்கியராஜ் (வயது29), கண்ணன் (46), செந்தில் குமார் (33) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 
ரோந்து பணி 
எம். புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் கொத்தனேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முருககுமார் (30) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 32 மதுபாட்டில்களை பறி முதல் செய்தனர். 
இதே போல் சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் நாரணாபுரம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அனுமதியின்றி மதுவிற்ற முத்துராஜ் (28) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். 
பறிமுதல் 
இதேபோல் சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ரோந்து பணியில் இருந்த போது சிவானந்தம்நகரில் அனுமதியின்றி மது விற்ற வரதராஜ் (19) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 24 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் நேருரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு அனுமதியின்றி மதுவிற்ற அருள்நகர் சுரேஷ்குமார் (44) என்பவரை போலீசார்கைது செய்து அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 
சப்- இன்ஸ்பெக்டர் பாண்டியன் கொங்கலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது அங்கு மதுவிற்ற கணேசன் (31) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 8 மதுபாட் டில்களை பறிமுதல் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன் சிறுகுளம் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்ட போது அங்கு மதுவிற்ற ராஜேந்திரன் (41) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 
கைது 
வெம்பக்கோட்டை சந்திப்பு பகுதியில் மது விற்றதாக கருப்பசாமி (44) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்களை டவுன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் காசிராஜன் அம்பலார்மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மதுவிற்ற முத்துசெல்வம் (22) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 248 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இருக்கன்குடி 
இருக்கன்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் ஸ்டீபன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்தார்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வைத்து மதுவிற்ற அதேகிராமத்தை சேர்ந்த கருப்பையா (வயது 29), இருக்கன்குடியில் மது விற்ற கார்த்திகேயன் (35), முத்துசாமியாபுரம் பகுதியி்ல மது விற்ற மாரிமுத்து (29) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 
அதேபோல சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது கிருஷ்ணன் கோவில் அருகில் வைத்து மதுவிற்ற கருப்பசாமி (40), வீரபாண்டியபுரம் பகுதியில் மது விற்ற மேட்டமலையை சேர்ந்த கந்தசாமி (45) ஆகியோரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.  சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்பெக்டர் சுந்தரராஜ் மற்றும் போலீசார்,  சிவராஜ் (57) என்பவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Next Story