தர்மபுரி மாவட்டத்தில் 295 பேருக்கு கொரோனா தொற்று


தர்மபுரி மாவட்டத்தில் 295 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 10 May 2021 5:02 PM GMT (Updated: 10 May 2021 5:02 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 295 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனிடையே நேற்று மாவட்டத்தில் ஏ.சப்பாணிப்பட்டியை சேர்ந்த 15 பேர் உள்பட 295 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக மையங்களில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,481 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 166 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 74 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Next Story