திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 662 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 662 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை
கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தரப்பில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் நேற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது நேற்று ஒரே நாளில் 662 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி நேற்று 238 பேர் குணமடைந்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.
நேற்று வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 237 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 24 ஆயிரத்து 438 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 2471 ேபர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 328 பேர் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
Related Tags :
Next Story