10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது


10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 May 2021 8:15 PM GMT (Updated: 10 May 2021 8:15 PM GMT)

10 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்

மதுரை
மதுரை நகரில் கஞ்சா விற்பனை தடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவின் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே அந்த பகுதிக்கு உட்பட்ட பகுதில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சா உள்ளிட்ட சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். மதுரை அவனியாபுரம் போலீசார் மேலஅனுப்பானடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றது. அதில் 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த பிரேம்குமார்(வயது 24), கார்த்திக்ராஜா(27), சிமெண்ட் ரோடு மீனாட்சி நகரை சேர்ந்த திருமுருகன் (27) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story