சேலம் மாவட்டத்தில் புதிதாக 532 பேருக்கு தொற்று உறுதி


சேலம் மாவட்டத்தில் புதிதாக 532 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 10 May 2021 8:31 PM GMT (Updated: 10 May 2021 8:31 PM GMT)

சேலம் மாவட்டத்தில் புதிதாக 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிதாக 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 639 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 532 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 217 பேர், ஆத்தூரில் 51 பேர், ஓமலூரில் 35 பேர், பனமரத்துப்பட்டியில் 30 பேர், சேலம் ஒன்றியத்தில் 27 பேர், சங்ககிரியில் 24 பேர், மேட்டூரில் 21 பேர், வீரபாண்டியில் 16 பேர், நங்கவள்ளியில் 15 பேர், தலைவாசலில் 14 பேர், எடப்பாடி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 11 பேர், காடையாம்பட்டியில் 10 பேர், கொங்கணாபுரத்தில் 8 பேர், கொளத்தூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், மகுடஞ்சாவடியில் 6 பேர், மேச்சேரி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், நரசிங்கபுரத்தில் 4 பேர், ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையத்தில் தலா 3 பேர், தாரமங்கலத்தில் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
485 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 448 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 485 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 3 ஆயிரத்து 469 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
6 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 46, 34 ஆகிய வயதுடைய 2 பெண்களும், 75 வயதுடைய மூதாட்டியும், 65 வயதுடைய முதியவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். மேலும் 50, 54 வயதுடைய ஆண்கள் 2 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் பலியானார்கள். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது.

Next Story