வந்தவாசி தபால் அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா


வந்தவாசி தபால் அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 May 2021 12:24 PM GMT (Updated: 11 May 2021 12:24 PM GMT)

வந்தவாசி தபால் அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர பகுதியில் 139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 4 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தநிலையில் வந்தவாசி தபால் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தபால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. நகராட்சி சுகாதார பணியாளர்கள் பிளீச்சிங் பவுடர் போட்டு, கிருமிநாசினி தெளித்தனர்.

Next Story