சங்கராபுரம் பகுதி கடைகளில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு


சங்கராபுரம் பகுதி கடைகளில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 11 May 2021 4:58 PM GMT (Updated: 11 May 2021 4:58 PM GMT)

சங்கராபுரம் பகுதி கடைகளில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு

சங்கராபுரம்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கை அறிவித்தது. இதில் காய்கறி, மளிகை, பழங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட கடைகள் மட்டும் பகல் 12 மணிவரை திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் டீ கடை மற்றும் ஒட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் பர்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சில கடைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக கூடி நிற்பதை காண முடிகிறது. இதை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர்கள் மற்றும் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் நேற்று சங்கராபுரம் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொணடார். சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தில் உள்ள டீக்கடையில் பொதுமக்கள் கூட்டமாக நின்று கொண்டு இருந்ததை பார்த்த சப்- கலெக்டர் ஸ்ரீகாந்த் கடை உரிமையாளர் மற்றும் பொதுமக்களை எச்சரித்து அறிவுரை வழங்கினார். 

Next Story