மின்வாரிய ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
அந்தியூர் அருகே மின்வாரிய ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்தியூர்
அந்தியூர் அருகே மின்வாரிய ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மின்வாரிய ஊழியர்
அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதூர் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 75). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவர் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நோய் குணமாகவில்லை.
இதனால் குருசாமி மனம் உடைந்து காணப்பட்டு வந்தார். மேலும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சம்பவத்தன்று குருசாமி விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
தற்கொலை
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் மேல்சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், குருசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இறந்த குருசாமிக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story