சூதாடிய 4 பேர் கைது


சூதாடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 May 2021 4:12 PM GMT (Updated: 12 May 2021 4:12 PM GMT)

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் அருகே காட்டூரணி பகுதியில் பணம் வைத்து சூதாடிய காட்டூரணி யாதவர் தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது38),  காளீஸ்வரன் (35), சங்கர்குமார் (38), வினோத் (28) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்திய  ரூ.ஆயிரத்து 620-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story