எண்ணூரில் சுற்றித்திரிந்த ஈரான் நாட்டை சேர்ந்தவர் கைது


எண்ணூரில் சுற்றித்திரிந்த ஈரான் நாட்டை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 13 May 2021 4:59 AM GMT (Updated: 13 May 2021 4:59 AM GMT)

எண்ணூரில் சுற்றித்திரிந்த ஈரான் நாட்டை சேர்ந்தவர் கைது.

திருவொற்றியூர், 

சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் சுற்றித்திரிவதாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், ஈரான் நாட்டை சேர்ந்த நோஸ்ராடோலோ (வயது 39) என்பதும், 2018-ம் ஆண்டு சுற்றுலாவாசியாக இந்தியா வந்தவர், அதன்பிறகு இங்கேயே தங்கி விட்டதும் தெரியவந்தது. அவரிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாததால் ஆங்காங்கே கிட்டார் வாசித்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்ததும் தெரிந்தது.

அவரை கைது செய்து தொடர்ந்து விசாரிக்கும் போலீசார், ஈரான் நாட்டு தூதரகம் மூலமாக அவரை சொந்த நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Next Story