கொரோனாவுக்கு தூய்மை பணியாளர் பலி


கொரோனாவுக்கு தூய்மை பணியாளர் பலி
x
தினத்தந்தி 13 May 2021 5:50 PM GMT (Updated: 13 May 2021 5:50 PM GMT)

கொரோனாவுக்கு தூய்மை பணியாளர் பரிதாபமாக இறந்தார்

நயினார்கோவில்
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் பொட்டகவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராயப்பன். இவரது மனைவி மஞ்சுளா(வயது 52). இவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானதால் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமைனயில் அவர் இறந்தார். மஞ்சுளா குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பொட்டகவயல் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story