பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது
பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்
மணமேல்குடி
மணமேல்குடியை அடுத்த திருவப்பாடி கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் துரையரசன் (வயது 35). இவரது பெட்டிக் கடையில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மணமேல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் அந்த பெட்டிக்கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைக்கு பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் துரையரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மணமேல்குடியை அடுத்த திருவப்பாடி கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் துரையரசன் (வயது 35). இவரது பெட்டிக் கடையில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மணமேல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் அந்த பெட்டிக்கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைக்கு பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் துரையரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story