கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு


கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 13 May 2021 7:57 PM GMT (Updated: 13 May 2021 7:57 PM GMT)

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் செங்குந்தபுரம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இதில் நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், கசாயம் காய்ச்சி குடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பரிசு பொருட்களை சமூக ஆர்வலர்கள் வழங்கினர். முன்னதாக முகாமை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் சுபாஷினி மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்

Next Story