கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலி


கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலி
x
தினத்தந்தி 14 May 2021 7:05 PM GMT (Updated: 14 May 2021 7:05 PM GMT)

கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகினர். புதிதாக 319 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கரூர்
கொரோனா அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா ெதாற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல கரூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் தொற்று அதிகரித்து தான் வருகிறது.
அந்தவகையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி கரூர் மாவட்டத்தில் புதிதாக 319 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8 பேர் பலி
 இந்தநிலையில் கொரோனா ெதாற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 290 பேர் நேற்று பூரண குணமடைந்ததால் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 ஆனால், சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,566 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story