கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி


கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 14 May 2021 8:47 PM GMT (Updated: 14 May 2021 8:47 PM GMT)

கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.
வாலிபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பெல்லாரம்பள்ளி அருகே உள்ள வெங்கிலிகானப்பள்ளியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் சசி (வயது 23). கட்டிட வேலை செய்து வந்தார். 
இவர் சம்பவத்தன்று மோட்டார்சைக்கிளில் தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவதானப்பட்டி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்தது. 
விசாரணை
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story