மதுவிற்ற பெண் கைது


மதுவிற்ற பெண் கைது
x
தினத்தந்தி 16 May 2021 7:47 PM GMT (Updated: 16 May 2021 7:47 PM GMT)

சிவகாசியில் மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காசிராஜன் சிவகாமிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது தமிழரசன் மனைவி தங்கம் என்பவர் தனது வீட்டின் அருகில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து தங்கத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 80 மதுபாட்டில்களையும், ரூ.1280-யையும் பறிமுதல் செய்தனர்.

Next Story