திருக்கோவிலூர் அருகே கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி


திருக்கோவிலூர் அருகே கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 17 May 2021 3:35 PM GMT (Updated: 17 May 2021 3:35 PM GMT)

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கொரனோ பாதிப்பு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி திருக்கோவிலூரை அடுத்த ரிஷிவந்தியம் மதுரா அரியந்தக்கா கிராமத்தில் நடைபெற்றது.

திருக்கோவிலூர்,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கொரனோ பாதிப்பு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி திருக்கோவிலூரை அடுத்த ரிஷிவந்தியம் மதுரா அரியந்தக்கா கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. கிளை செயலாளர் செல்வக்குமார் தலைமை தாங்கி 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரணம் முதல் தவணை தலா ரூ.2 ஆயிரம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கிளை அவை தலைவர் சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் பாண்டுரங்கன், ரமேஷ், திருமலை, பொருளாளர் கிருஷ்ணன், கணபதி, இளைஞர் அணி அமைப்பாளர் மணி, துணை அமைப்பாளர்கள் வெங்கடாசலம், பாண்டியன், காலனி பகுதி கிளை செயலாளர் மொட்டையன், பரமேஸ்வரன், பிரகாஷ் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் மாயவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story