திண்டுக்கல்லில் ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி


திண்டுக்கல்லில் ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 17 May 2021 4:21 PM GMT (Updated: 17 May 2021 4:21 PM GMT)

திண்டுக்கல்லில் ரெயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம், ரெயில்வே காலனியில் உள்ள மருத்துவமனையில் நேற்று நடந்தது. 
மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத்துறை சார்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது. முகாமில் திண்டுக்கல் கோட்ட ரெயில்வே மருத்துவ அதிகாரி ஜெகதீஸ்வரி கலந்துகொண்டு ரெயில்வே ஊழியர்களுக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி செலுத்தினார். 
இதில் ரெயில்வே ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்திருந்தனர்.

Next Story