கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி
கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராமமூர்த்தி (வயது 55). கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது.
இந்தநிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று பிற்பகல் அவர் உயிர் இழந்தார். ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த மாதத்தில் போலீஸ்காரர் சிலம்பரசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், சம்பத்குமார் ஆகியோர் கொரோனாவுக்கு பலியான நிலையில், தற்போது மேலும் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story