சேக்கல்முடி போலீஸ் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்


சேக்கல்முடி போலீஸ் நிலையம் சார்பில்  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
x
தினத்தந்தி 17 May 2021 6:12 PM GMT (Updated: 17 May 2021 6:12 PM GMT)

சேக்கல்முடி போலீஸ் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

வால்பாறை

வால்பாறை வட்டார பகுதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையிலும், இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி முன்னிலையிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  

அப்போது தேவை இல்லாமல் வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். அதுபோன்று வெளியே நடமாடியவர்களை எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் கொரோனா பரவலை தடுக்க சேக்கல்முடி போலீஸ் நிலைய பகுதியில் பொது மக்களுக்கு போலீசார் கபசுர குடிநீர் வழங்கினார்கள். 

அத்துடன் தேவை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது என்று பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்கள்.


Next Story