இளையான்குடி,
இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் த.மு.மு.க. சார்பில் கபசுர குடிநீர் மற்றும் ஆர்சனிக் ஆல்பம் என்ற ஓமியோபதி மருந்து வீடு, வீடாக வினியோகம் செய்யப்பட்டது. .கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் ஆர்சனிக் ஆல்பம் என்ற மருந்தினை வழங்கினர். இந்த பணியில் த.மு.மு.க.வின் மாவட்ட தலைவர் துல்கர்னை சேட், நகர தலைவர் ஜலாலுதீன், பொறுப்புக்குழு ராபீட், ஊடக அணி அகமது ஜலால், அல்காப் ஆகியோர் ஈடுபட்டனர். தன்னார்வ பணியில் ஈடுபட்ட த.மு.மு.க.வினரை பொதுமக்கள் பாராட்டினர்.