கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 17 May 2021 7:29 PM GMT (Updated: 17 May 2021 7:29 PM GMT)

கொரோனா தடுப்பூசி முகாமில் 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மருத்துவ குழுவினர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமில் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த 50 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 
இதேபோல் ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் மருத்துவ குழுவினர் 45 வயதிற்கு மேற்பட்ட 50 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.

Next Story